கிரிக்கெட்

டெஸ்ட் தொடர்: கோலி விளையாடுவாரா? பிசிசிஐ-யின் புதிய அப்டேட்

Published On 2024-02-08 09:25 GMT   |   Update On 2024-02-08 09:25 GMT
  • முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாடவில்லை.
  • முதலில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது.

முதலில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து வரும் 3 டெஸ்ட் போட்டிகளில் யார் யார் விளையாடுவார்கள் என்பது கேள்வி குறியாகவே உள்ளது. முக்கியமாக விராட் கோலி விளையாடுவாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலி விளையாடுவாரா என்பது குறித்து பிசிசிஐ விளக்கம் கொடுத்துள்ளது. அதில், இந்திய அணிக்கு எப்போது திரும்ப வேண்டும் என்பது அவருக்கு தெரியும். கோலி இன்னும் எங்களுக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை. ஆனால் அவர் எப்போது முடிவு செய்தாலும் அவருக்கு இந்திய அணியில் இடம் இருக்கும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கிரிக்கெட் போட்டிகளில் கோலி இருந்தால், அந்த போட்டியை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். அவர் கொடுக்கும் ரியாக்ஷன், பீல்டிங், ஆட்டம், என சொல்லி கொண்டே போகலாம். அவர் இல்லாதாது அவரது ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது என்றே சொல்லலாம்.

கோலியின் மனைவி கர்ப்பமாக இருப்பதால் அவர் விளையாட வரமாட்டார் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News