15 சீசனில் 13 கேப்டன்களை மாற்றியும் கோப்பையை வெல்லாத அணி- ஐபிஎல் தொடரில் சுவாரஸ்யம்
- இதுவரை நடந்த 15 சீசனில் 14 கேப்டன்கள் அந்த அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர்.
- ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாத அணிகளுள் அந்த அணியும் ஒன்று.
சென்னை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அதிக பட்சமாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தடவை பட்டம் பெற்றுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா 1 தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன. 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அதிக கேப்டன்களை மாற்றிய அணியாக பஞ்சாப் புதுவிதமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுவரை நடந்த 15 சீசனில் 13 கேப்டன்கள் அந்த அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர். ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாத அணிகளுள் பஞ்சாப் அணியும் ஒன்று. இந்தாண்டு பஞ்சாப் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன்கள் பட்டியல்:-
யுவராஜ் சிங் -இந்தியா
குமார் சங்ககாரா -இலங்கை
ஜெயவர்தனே -இலங்கை
கில்கிறிஸ்ட் -ஆஸ்திரேலியா
டேவிட் ஹசி -ஆஸ்திரேலியா
பெய்லி -ஆஸ்திரேலியா
சேவாக் - இந்தியா
டேவிட் மில்லர் -தென் ஆப்பிரிக்கா
முரளி விஜய் -இந்தியா
மேக்ஸ்வெல் -ஆஸ்திரேலியா
அஸ்வின் -இந்தியா
கேஎல் ராகுல் - இந்தியா
அகர்வால் -இந்தியா