கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 போட்டி: விராட் கோலி விலகல்

Published On 2024-02-10 06:15 GMT   |   Update On 2024-02-10 06:28 GMT
  • மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15-ம் தேதி ராஜ்கோட்டில் நடக்க உள்ளது.
  • 3 போட்டிகளுக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறவில்லை.

புதுடெல்லி:

இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிந்து இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15-ம் தேதி ராஜ்கோட்டில் நடக்க உள்ளது.

இந்நிலையில், கடைசி 3 போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது.

இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். தனிப்பட்ட காரணத்துக்காக கோலி விலகியதை ஏற்றுக்கொள்வதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News