கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 போட்டி: விராட் கோலி விலகல்
- மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15-ம் தேதி ராஜ்கோட்டில் நடக்க உள்ளது.
- 3 போட்டிகளுக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறவில்லை.
புதுடெல்லி:
இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிந்து இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15-ம் தேதி ராஜ்கோட்டில் நடக்க உள்ளது.
இந்நிலையில், கடைசி 3 போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது.
இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். தனிப்பட்ட காரணத்துக்காக கோலி விலகியதை ஏற்றுக்கொள்வதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.