டி.என்.பி.எல்.கிரிக்கெட்: முரளி விஜய் சதம் வீணானது- 66 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றி
- திருச்சி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.
- நெல்லை வீரர் சஞ்சய் யாதவ் 103 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், ரஹில் ஷா தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ரஹில் ஷா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிரஞ்சன் 5 ரன்னுடன், சூரிய பிரகாஷ் 18 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
சிறப்பாக விளையாடிய பாபா அபராஜித், 48 பந்துகளில் 92 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். மற்றொருபுரம் சஞ்சய் யாதவ் 55 பந்துகளில் 103 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் அடித்தது.
இதையடுத்து 237 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி திருச்சி அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் அதிரடியாக விளையாடி 66 பந்துகளில் 121 ரன்கள் குவித்தார்.
எனினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆதித்ய கணேஷ் 13 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றி பெற்றது.