ஆன்மிக களஞ்சியம்

நவக்கிரக தோஷ பரிகாரம்-புதன்பகவான் மற்றும் குருபகவான்

Published On 2024-09-27 10:53 GMT   |   Update On 2024-09-27 10:53 GMT
  • நாட்டக் குறிஞ்சி ராகத்தில் புதன் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்துகொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
  • அடாணா ராகத்தில் குரு கீர்த்ததனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.

புதன்

புதன் பகவானுக்குப் புதன்கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம் மரகதமணி வெண்தாமரை போன்றவற்றால் அலங்காரம் செய்து, புதன் மந்திரங்களை ஓதி நாயுருவி சமித்தால் யாகத் தீயை எழுப்பிப் பாசிப் பயத்தம் பருப்பு பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, நாட்டக் குறிஞ்சி ராகத்தில் புதன் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்துகொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.

இப்படிச் செய்தால் புதன் கிரகதோஷம் நீங்கும்.

குரு

குரு பகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள் நிற வஸ்திரம், புஷ்பராகமணி, வெண் முல்லை போன்றவற்றால் அலங்காரம் செய்து குரு மந்திரங்களை ஓதி அரசஞ்சமித்தினால் யாகத்தீயை எழுப்பிக் கடலைப் பொடி அன்னம் எலுமிச்சம்பழ அன்னம் ஆகியவற்றால் ஆகுதி பண்ணித் தீபாரதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, அடாணா ராகத்தில் குரு கீர்த்ததனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.

இப்படிச் செய்தால் குருக்கிரக தோஷம் நீங்கும்.

Similar News