உள்ளூர் செய்திகள் (District)

சிமெண்ட் லாரி மோதி தொழிலாளி

Published On 2023-04-03 07:10 GMT   |   Update On 2023-04-03 07:10 GMT
  • மாடு குறுக்கே வந்ததால் கீழே விழுந்தவர் மீது லாரி ஏறியது
  • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையார் ஏந்தல் ஆசாரி தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது21). தச்சு தொழிலாளியான இவர், ஏந்தல் கிராமத்தில் இருந்து செதில வாடி குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்காக உடையார்பாளையம் எல்லைகள் தெரு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் குறுக்கே வந்த மாடு மீது பிரகாஷ் மோதி கீழே விழுந்தார். அப்போது அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த சிமென்ட் ஏற்றிக் கொண்டு சென்ற லாரியின் பின் பக்க சக்ரத்தில் பிரகாஷ் சிக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த பிரகாஷை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News