உள்ளூர் செய்திகள் (District)
அன்னூர் அருகே 108 ஆம்புலன்சு மோதி விபத்து
- அந்த வழியாக சென்ற 108 ஆம்புலன்சு சித்ரா மீது மோதியது.
- மேல் சிகிச்சைக்காக சரவணம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
கோவை,
கோவை கணபதி மாநகரை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மனைவி சித்ரா (வயது 49). சம்பவத்தன்று இவர் கோவை -அன்னூர் இடையே உள்ள கைகாட்டி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற 108 ஆம்புலன்சு சித்ரா மீது மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை ஆம்புலன்சு ஊழியர்கள் மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சித்ராவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சரவணம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.