உள்ளூர் செய்திகள்

வால்பாறையில் மொபட்-டிராக்டர் மோதி 2 பேர் படுகாயம்

Published On 2023-06-04 08:55 GMT   |   Update On 2023-06-04 08:55 GMT
  • பாலமுருகன் மற்றும் சூர்யாவை ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
  • ஷேக்கல்முடி போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் சக்தியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வால்பாறை,

கோவை மாவட்டம் வால்பாறை முருகாளி எஸ்டேட்டை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 39). இவரது மகன் சூர்யா (12). இவர்கள் நேற்று முருகாளி எஸ்டேட்டில் இருந்து மொபட்டில் வால்பாறைக்கு சென்றனர்.

அப்போது பெரியார் நகர் அருகே, எதிர்பாராதவிதமாக டிராக்டர் மோதியது. இதல் பாலமுருகன், சூர்யாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. எனவே அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்ககு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தந்தை பாலமுருகன், மகன் சூர்யா ஆகிய 2 பேரும் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஷேக்கல்முடி போலீசார் வழக்கு பதிவு செய்து அதிவேகமாக டிராக்டர் ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தியதாக, டிரைவர் சக்தி (38) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News