திருக்கோவிலூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
- மோகன்ராஜ் (வயது 31). இவர் திருக்கோவிலூர் பஸ் கண்ணாடியை உடைக்க போவதாகவும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபாசமாக பேசி தகராறு செய்து கொண்டிருந்தார்.
- கைது செய்யப்பட்ட மோகன்ராஜிடம் விசாரணை நடத்திய போது 50 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலம் வைத்திருந்தார்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள சோழபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் மோகன்ராஜ் (வயது 31).
இவர் திருக்கோவிலூர்- கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டில் செங்கனான்கொள்ளை கிராம பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பஸ் கண்ணாடியை உடைக்க போவதாகவும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபாசமாக பேசி தகராறு செய்து கொண்டிருந்தார். இது குறித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற திருக்கோவிலூர் போலீசார் மோகன்ராஜை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மோகன்ராஜிடம் விசாரணை நடத்திய போது 50 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலம் வைத்திருந்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதேபோல் ஜி .அரியூர்அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் எதிரே மெயின் ரோட்டில் நின்று கொண்டு தகராறு செய்து கொண்டு இருந்த சோழபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் சூர்யாவை( வயது 23 )போலீசார் கைது செய்து சோதனை நடத்திய போது 50 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலம் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மோகன்ராஜ் மற்றும் சூர்யா ஆகியோர் மீது திருக்கோவிலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்கு பதிவு செய்து கஞ்சா எங்கிருந்து கடத்தப்பட்டது பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.