செய்திகள் (Tamil News)

திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

Published On 2018-05-10 17:11 GMT   |   Update On 2018-05-10 17:11 GMT
திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
திருவையாறு:

தஞ்சை அருகே உள்ள ஆவடி குமளையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ரகுபதி மகன் கபிலன் (18) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவையாறு சென்றனர்.

பின்னர் சொந்த ஊர் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ரமேஷ் ஓட்டினார். அவர்கள் அம்மன் பேட்டை மணக்கரம்பை ரோட்டில் சென்றபோது இன்னொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் ரமேஷ், கபிலன் ஆகியோரும், இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த நசீர், வீரமணி, புஷ்பராஜ் ஆகியோரும் காயமடைந்தனர். இதில் ரமேஷ் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து நடுக்காவிரி சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News