செய்திகள்

தூத்துக்குடி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-05-12 16:29 GMT   |   Update On 2018-05-12 16:29 GMT
தூத்துக்குடி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடார்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி ஓம்சாந்தி நகரை சேர்ந்தவர் கணேசன் மகன் ராமசந்திரன் (வயது 34) தச்சு தொழிலாளி. இவருக்கு சரியாக வேலை அமையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராமசந்திரன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராமசந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News