செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்
மேட்டுப்பாளையத்தில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே உள்ள வேடர்காலனி அகதி முகாமைச் சேர்ந்தவர். ராமமூர்த்தி(27) கூலிதொழிலாளி.
இவரது மனைவி வெண்ணிலா(22) இவர்களுக்கு ஏற்கெனவே 3 வயதில் யோகி தாசினி என்ற பெண்குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் வெண்ணிலா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று இரவு பிரசவவலி ஏற்பட்டது. பிரசவ வலியால் துடித்த அவருக்கு காலை 7.45 மணிக்கு பிரசவ வலி அதிகரித்தது. உடனே இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வெண்ணிலாவை பிரசவத்துக்காக ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு வரப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊமப்பாளையம் முனியப்பன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து ஆம்புலன்ஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து வெண்ணிலாவிற்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. பின்னர் வெண்ணிலா மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். #Tamilnews
மேட்டுப்பாளையம் அருகே உள்ள வேடர்காலனி அகதி முகாமைச் சேர்ந்தவர். ராமமூர்த்தி(27) கூலிதொழிலாளி.
இவரது மனைவி வெண்ணிலா(22) இவர்களுக்கு ஏற்கெனவே 3 வயதில் யோகி தாசினி என்ற பெண்குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் வெண்ணிலா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று இரவு பிரசவவலி ஏற்பட்டது. பிரசவ வலியால் துடித்த அவருக்கு காலை 7.45 மணிக்கு பிரசவ வலி அதிகரித்தது. உடனே இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வெண்ணிலாவை பிரசவத்துக்காக ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு வரப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊமப்பாளையம் முனியப்பன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து ஆம்புலன்ஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து வெண்ணிலாவிற்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. பின்னர் வெண்ணிலா மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். #Tamilnews