செய்திகள் (Tamil News)

திருப்பூரில் திருமணமான 1½ மாதத்தில் வாலிபர் தற்கொலை

Published On 2018-06-09 16:21 GMT   |   Update On 2018-06-09 16:21 GMT
திருப்பூரில் திருமணம் முடிந்து 1½ மாதத்திலேயே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு குழிக்காடு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சந்தியா(23). பனியன் நிறுவன தொழிலாளி.

இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் வழக்கம் போல் சந்தியா பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டுக்குள் மின்விசிறியில் மகேந்திரன் வயரால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மகேந்திரன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் முடிந்து 1½ மாதத்திலேயே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News