செய்திகள்

திருமங்கலம் அருகே பட்டதாரி பெண் காதலனுடன் ஓட்டம்- வீட்டுக்கு தீவைப்பு

Published On 2018-06-12 09:27 GMT   |   Update On 2018-06-12 09:27 GMT
திருமங்கலம் அருகே பட்டதாரி பெண் காதலனுடன் சென்றதால் அவரது குடும்பத்தினர் வாலிபர் வீட்டுக்கு தீ வைத்தனர்.
பேரையூர்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் பி.டி.ராஜன் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம், அரசு பஸ் டிரைவர். இவரது மகன் அருண் (வயது26). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

திருமங்கலம் ராஜீவ் நகரைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மகள் சர்மிளா (25), முதுகலை பட்டதாரி. இவரும், அருணும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்மிளாவுக்கு வேறு ஒருவருடன் பெற்றோர் நிச்சயம் செய்தனர். இது பிடிக்காத அவர் கடந்த 10-ந்தேதி வீட்டில் இருந்து மாயமாகி விட்டார்.

இதுகுறித்து திருமங்கலம் போலீசில் பன்னீர்செல்வம் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் காதலன் அருணுடன் சர்மிளா சென்று இருப்பது தெரியவந்தது.

இதனால் சர்மிளா குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்தனர். அவரது உறவினர்கள் அருண் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு வீடு பூட்டப்பட்டு இருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்ற சர்மிளாவின் உறவினர்கள் அங்கிருந்து பொருட்கள் அடித்து உடைத்து சூறையாடினர். பின்னர் வீட்டுக்கும் தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News