செய்திகள் (Tamil News)

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்காதது வேதனை அளிக்கிறது - விவசாயிகள் குமுறல்

Published On 2018-07-27 10:21 GMT   |   Update On 2018-07-27 10:21 GMT
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்காதது வேதனை அளிக்கிறது என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். #Farmers

ஈரோடு:

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறை கேட்பு நாள் கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.

மேலும் விவசாயி ஒருவர் பேசும் போது, “கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் தேதியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். ஆனால் அதன் படி வாய்க்காலில் ஏன் தண்ணீர் திறக்கவில்லை? இதனால் எங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது” என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறியதாவது.-

கீழ்பவானி வாய்க்காலுக்கு முன் கூட்டியே தண்ணீர் திறந்தால் அது பாசனத்துக்கு சரியாக இருக்காது என்று ஒரு சில விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த விசயத்தில் சில விவநாய சங்கத்தினர் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வருகிறார்கள். இது சரியானது அல்ல.

விவசாயிகளுக்கு தண்ணீர் திறப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளுக்கு தண்ணீர் தேவைப்படும் பொழுது தண்ணீர் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #Farmers

Tags:    

Similar News