செய்திகள் (Tamil News)

தீரன் சின்னமலை லட்சியத்துக்காக திமுக குரல் கொடுக்கும் - மு.க.ஸ்டாலின்

Published On 2018-08-03 07:31 GMT   |   Update On 2018-08-03 07:31 GMT
தீரன் சின்னமலை லட்சியத்துக்காக திமுக குரல் கொடுக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #DMK #MKStalin

சென்னை:

தீரன் சின்னமலையின் 213-வது நினைவு தினத்தை கிண்டியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 213-வது நினைவு நாள் இன்று. வருடந்தோறும் அவரை போற்றுகின்ற வகையில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன்னுடைய மரியாதையையும், அஞ்சலியையும் செலுத்திக் கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய மரியாதையை நாங்கள் செலுத்தி இருக்கிறோம்.

கொங்கு மண்டலத்தில் இருக்கக்கூடிய மக்களுக்காக மட்டுமல்லாமல், தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய மக்களுக்காகவும், ஏன் இந்திய நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர் தீரன் சின்னமலை.

எனவே, அவருக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, தமிழகத்தினுடைய முதல்-அமைச்சராக இருந்த கலைஞர், கிண்டியில் அவருக்கு சிலை அமைத்துத்தந்தார்.

அதுமட்டுமல்லாமல், மத்தியிலே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்ற நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் இடம் பெற்றிருந்தபொழுது அவருக்கு அஞ்சல்தலை வெளியிடக் கூடிய வாய்ப்பையும் பெற்றுத் தந்தவர் கலைஞர்.

எனவே, தீரன் சின்னமலையின் 213-வது நினைவு நாளில் அவர் எந்த கொள்கைக்காக, எந்த லட்சியத்திற்காக வாழ்ந் திருக்கிறாரோ அதனை நிறைவேற்ற, எல்லா நிலையிலும் கலைஞர் காட்டக்கூடிய வழியில் நின்று, திராவிட முன்னேற்றக்கழகம் தொடர்ந்து குரல் கொடுக்கும், பாடுபடும், பணியாற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News