செய்திகள் (Tamil News)

விக்கிரவாண்டி அருகே கார் மோதி தொழிலாளி பலி

Published On 2018-08-02 09:44 GMT   |   Update On 2018-08-02 09:44 GMT
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கார் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது45), தொழிலாளி

இவர் நேற்று இரவு விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த செல்வத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசபட்ட செல்வம் பலத்த காயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் கொண்டும் செல்லும் வழியிலேயே செல்வம் பரிதாபமாக இறந்து விட்டார்.

விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News