செய்திகள்

திருமங்கலம் 4 வழிச்சாலையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2018-09-28 11:53 GMT   |   Update On 2018-09-28 11:53 GMT
திருமங்கலம் 4 வழிச்சாலையில் கஞ்சா விற்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பேரையூர்:

திருமங்கலம் நகர் போலீசார் 4 வழிச்சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.

அவர்களில் ஒருவன் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டான். மற்ற 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

பிடிபட்ட 2 பேரையும் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் அவர்களை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 2 பேரிடம் இருந்தும் 1 கிலோ 300 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து 2 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்களது பெயர் மணிகண்டன் (வயது 20) பசுமலை குறிஞ்சி நகர், சல்மான்கான் (23) பழங்கா நத்தம் என தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய விவேக்கை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News