செய்திகள்
பாராளுமன்ற தேர்தல் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தலைமைக் கழகத்தில் தொடங்கியது. #parliamentelection #admk #election manifesto
சென்னை, பிப். 4-
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கையினை தயார் செய்வதற்கான குழு ஏற்கனவே அறிவிக்கப்பட் டிருந்தது.
அதன்படி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சரு மான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங் கிணைப் பாளரும், முதல்- அமைச்சரு மான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமைக் கழகத்தில் இன்று கழக தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் குழுவினருக்கு ஆலோசனைகளை வழங்கி பணியினை தொடங்கி வைத்தார்கள். அப்போது தலைமை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தேர்தல் அறிக்கையினை தயார் செய்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ள கழக அமைப்புச் செயலாளர்கள் பொன்னையன், நத்தம் விசுவநாதன், அமைச் சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண் முகம் மற்றும் செம்மலை, பி.எச்.மனோஜ் பாண்டியன், ரபிபெர்னார்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். #parliamentelection #admk #election manifesto