செய்திகள்

தேர்தலுக்குப்பிறகு தேமுதிக காணாமல் போய் விடும்- இளங்கோவன்

Published On 2019-02-26 04:19 GMT   |   Update On 2019-02-26 04:19 GMT
தேர்தலுக்கு பின் தே.மு.தி.க. காணமல் போகும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார். #Congress #EVKSElangovan #DMDK
ஈரோடு:

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் புதுமை காலனியில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கட்சி கொடியேற்று விழா மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி. ரவி தலைமையிலும் மாவட்ட துணை தலைவர் ராஜேஸ்ராஜப்பா மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக் திருச்செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திமுக தான் பலமான கூட்டணி. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு கட்சிகள் விரைவில் இந்த அணியில் இணைகிறது.

புதுச்சேரி உள்பட 40தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

பிரதமர் மோடி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பொய் பேசுவதில் மோடி பெரிய புழுகன் என்றால், ராமதாஸ் ஜூனியர் மோடியாக உள்ளார்.

மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதே போல் ராமதாசும் கொடுத்த பல வக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.



பா.ம.க, பதவிக்கு வரும் போது தனது குடும்பத்தினர் கட்சிக்குள் வரமாட்டார்கள் என்று கூறினார். ஆனால் தன் மகனை மத்திய அமைச்சராக்கினார். அதிமுக ஊழல் கட்சி அதில் சேர மாட்டேன் என்று கூறினார்.

ஆனால், தேர்தலுக்காக அரசியல் வியாபாரியாகவும், தரகராகவும், மாறிவிட்டார்கள்.

அதிமுக, பாமக கூட்டணியை அவர்களின் கடசித் தொண்டர்களே ஏற்கவில்லை. கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அதிமுக தனித்து நின்றால் கூட 40 தொகுதிகளில் டெபாசிட் பெறலாம். ஆனால் பாமக., கூட்டணியால் அதுவும் கிடைக்காது.

தே.மு.தி.க.வுடன், பேச்சுவார்த்தை கடைசி வரை இழுபறியாக இருக்கும். தேர்தலுக்கு பின் தேமுதிக காணமல் போகும். புதிய தமிழகம் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது தெரியாது. அதை ஒரு கட்சியாகவே நான் மதிப்பது இல்லை.

திமுக- காங்., தொகுதி ஒதுக்கீடு பேசி முடிவெடுக்கப்படும். அதற்கான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #Congress #EVKSElangovan #DMDK
Tags:    

Similar News