செய்திகள்

குமரியில் கல்லூரி மாணவி, இளம்பெண் மாயம்

Published On 2019-04-13 11:16 GMT   |   Update On 2019-04-13 11:16 GMT
கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி மற்றும் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ்போஸ். இவரது மகள் சோனியா சுபாஷ்(வயது20). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்து கல்லூரிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் கல்லூரி முடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடுதிரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி கல்லூரிக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து மாணவியை உறவினர்கள் வீடு, தோழிகள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லை.

இதையடுத்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாசம் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றார்.

களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் நிஷா(23). இவர் பி.ஏ. முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த நிஷா மாயமாகி இருந்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் விசாரித்தனர்.

மேலும் உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் இது குறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சொர்ணலதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News