உள்ளூர் செய்திகள் (District)

பொக்லைன் எந்திரம் திருடிய வழக்கில் கைதான 4 பேர்.

பொக்லைன் எந்திரம் திருடிய வழக்கில் 4 பேர் கைது

Published On 2023-10-22 10:33 GMT   |   Update On 2023-10-22 10:33 GMT
  • தட்டாங்கோவில் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
  • திருடப்பட்ட பொக்லைன் எந்திரத்தை விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த விக்கிரபாண்டியம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்.

இவர் பொக்லின் எந்திரம் வைத்து வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், இவர் கடந்த 13-ந் நாட்களுக்கு முன்பு தட்டாங்கோவில் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

இரவு நேரம் ஆனதால் பொக்லைன் எந்திரத்தை அதே சாலையில் நிறுத்தி விட்டு வீடு திரும்பினார்.

பின்னர், மறுநாள் காலை வந்து பார்த்தபோது பொக்லைன் எந்திரத்தை காணவில்லை.

இதனை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து, அருகில் தேடிபார்த்து விட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் பொக்லைன் எந்திரம் குறித்து விசாரித்தார்.

தொடர்ந்து, இதுகுறித்து தினேஷ் கோட்டூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் கோட்டூர் போலீசார் தனிப்படை அமைத்து பொக்லைன் எந்திரத்தை திருடி சென்றவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட பொக்லைன் எந்திரம் திருவிடைமருதூர் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த காளீஸ்வரனின் உதவியுடன் விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோட்டூர் போலீசார் திருவிடைமருதூர் பகுதியில் மறைத்து வைத்திருந்த பொக்லைன் எந்திரத்தை கைப்பற்றி அதனை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.

மேலும், திருட்டில் ஈடுபட்டதாக ஜெயசீலன், செய்யது சம்சுல்குதா, விக்னேஷ், காலிஸ்வரன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

திருட்டு சம்பவம் நடந்த 10 நாட்களில் மர்மநபர்களை பிடிக்க விரைந்து செயல்பட்ட கோட்டூர் தனிப்படை போலீசாரை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.

Tags:    

Similar News