உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் 17 வயது சிறுமி கிணற்றில் குதித்து தற்கொலை

Published On 2023-05-11 09:02 GMT   |   Update On 2023-05-11 09:02 GMT
  • சிறுமி தனது தாயிடம் சண்டை போட்டு விட்டு வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார்.
  • பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சுகந்தி (வயது 17). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவரிடம் அவரது தாய் டீ வைத்து கொடுக்கும் படி கேட்டார்.

அதற்கு சுகந்தி கோபித்துக்கொண்டு டீ வைத்து கொடுத்தார். தனது தாயிடம் சண்டை போட்டு விட்டு வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார்.

பின்னர் அந்த பகுதியில் உள்ள ஓம்சக்தி பங்காரு அடிகளார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு வரைந்து சென்றனர். பின்னர் கிணற்றில் இருந்து சுகந்தியின் உடலை மீட்டனர்.

இதனை தொடந்து போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News