உள்ளூர் செய்திகள்

சுல்தான்பேட்டை அருகே சகோதரி காதல் திருமணம் செய்ததால் கல்லூரி மாணவி வாய்க்காலில் குதித்தார்

Published On 2023-02-04 09:11 GMT   |   Update On 2023-02-04 09:11 GMT
  • தீயணைப்பு வீரர்கள் தேடி வருகிறார்கள்.
  • ரமேஷ் தனது மகளை திட்டி வெளியே அனுப்பி வைத்தார்.

கோவை,

சூலூர் சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி பிரிவை சேர்ந்தவர் ரமேஷ். கூலித் தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது இளைய மகள் திவ்யா (வயது 20).

பல்லடம் அரசு கல்லூரியில் பி.காம். 3-வது ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் ரமேஷின் மூத்த மகள் நர்மதா என்பவர் நேற்று முன்தினம் வீட்டில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாமல் மகேந்திரன் என்பவரை திருமணம் செய்தார். பின்னர் தனது வீட்டிற்கு சென்றார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரமேஷ் தனது மகளை திட்டி வெளியே அனுப்பி வைத்தார். இதுகுறித்து கல்லூரிக்கு சென்ற திவ்யாவிடம் அவரது பாட்டி செல்போன் மூலமாக தெரிவித்தார். தனக்கு தெரியாமல் தனது அக்கா திருமணம் செய்ததால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்தார்.

பின்னர் கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பிய திவ்யா வரும் வழியில் அந்த பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலுக்கு சென்றார். வாய்க்கால் முன்பு அழுது கொண்ேட நின்று கொண்டு இருந்த அவர் திடீரென வாய்க்காலில் குதித்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் உடலை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News