உள்ளூர் செய்திகள்

பரமத்தி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2023-03-31 07:13 GMT   |   Update On 2023-03-31 07:13 GMT
  • கடந்த 26-ந் தேதி குடும்ப தகராறு காரணமாக அதே பகுதியில் உள்ள பள்ளக்காட்டு தோட்டத்தில், விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
  • மேல் சிகிச்சைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவம னையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பி னும் சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி உயிரிழந்தார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், வடக்கு நல்லியாம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 57), விவசாயி. இவர் கடந்த 26-ந் தேதி குடும்ப தகராறு காரணமாக அதே பகுதியில் உள்ள பள்ளக்காட்டு தோட்டத்தில், விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து, உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவம னையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பி னும் சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி உயிரிழந்தார். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News