உள்ளூர் செய்திகள்
தீவட்டிப்பட்டி அருகே பூச்சி மருந்து குடித்த விவசாயி சாவு
- குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 23-ந் தேதி வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்து முருகன் குடித்துள்ளார்.
- தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை முருகன் உயிரிழந்தார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த களர்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). விவசாயியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
இந்த நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 23-ந் தேதி வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்து முருகன் குடித்துள்ளார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை முருகன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.