உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றிய சிறுத்தை

Published On 2023-02-24 09:29 GMT   |   Update On 2023-02-24 09:29 GMT
  • காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது தொடா்ந்து வருகிறது.
  • சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரவேனு,

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீா் தேடி சிறுத்தை, கரடி, காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது தொடா்ந்து வருகிறது.

இந்த நிலையில் அரவேனு பெரியாா் நகா் பகுதியில் சிறுத்தை ஒன்று நீண்ட நேரம் குடியிருப்புப் பகுதியில் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடமாடியது அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குடியிருப்புவாசிகளை அச்சமடையச் செய்துள்ளது.

இந்த சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

Tags:    

Similar News