உள்ளூர் செய்திகள் (District)

தீப்பிடித்து எரிந்த கார்.

சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் 'தீ'

Published On 2022-08-30 10:05 GMT   |   Update On 2022-08-30 10:05 GMT
  • வைத்தியநாதன் என்பவர் தனது காரில் நாச்சியார்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
  • சுதாரித்து கொண்ட வைத்தியநாதன் உடனடியாக காரை விட்டு வெளியேறியதால் உயிர் தப்பினார்.

நீடாமங்கலம்:

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 63). இவர் சம்பவத்தன்று தனது காரில் நாச்சியார்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஐந்து தலைப்பு வாய்க்கால், பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை கண்டு சுதாரித்து கொண்ட வைத்தியநாதன் உடனடியாக காரை விட்டு வெளியேறியதால் உயிர் தப்பினார். இது குறித்து நாச்சியார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News