உள்ளூர் செய்திகள்
விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
- விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- பிளஸ் டூ வரை படித்துவிட்டு வீட்டில் சும்மா இருந்து வந்தார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அருகே வி. மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தியின் மகன் ராஜேஷ் (வயது 21). இவர் பிளஸ் டூ வரை படித்துவிட்டு வீட்டில் சும்மா இருந்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது. எனவே சம்பவத்தன்று இவர் வேதனை தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.