உள்ளூர் செய்திகள் (District)

மோட்டார்சைக்கிள் மின்கம்பத்தில் மோதி வாலிபர் பலி

Published On 2023-02-28 10:40 GMT   |   Update On 2023-02-28 10:40 GMT
  • இருசக்கர வாகனத்தில் இரும்பறை - பெத்திக்குட்டை சாலையில் சென்றார்
  • சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை சித்தன்குட்டை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்(45). இவருக்கு நித்தியபிரியா (30) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

இவரும் ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலத்தை சேர்ந்த அஜித்கு மார்(26) என்பவரும் உறவினர்கள். இருவரும் திருப்பூரில் உள்ள நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திருப்பூரில் இருந்து சி வகுமாரை சித்தன்கு ட்டையில் விடுவதற்காக அஜித்குமார் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் இரும்பறை - பெத்திக்குட்டை சாலையில் சென்றார்.

அப்போது நிலைதடுமாறிய இரு சக்கர வாகனம் சாலையோர மின்கம்பத்தில் மோதியதில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், அஜித்குமார் லேசான காயம் அடைந்தார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை போலீசார் விரைந்து சென்று விபத்தில் பலியான சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

Tags:    

Similar News