உள்ளூர் செய்திகள் (District)

பலியான ஹரிணி.

மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி

Published On 2023-10-25 09:51 GMT   |   Update On 2023-10-25 09:51 GMT
  • இவர் வீட்டின் 2-வது மாடியில் பூ பறிக்க சென்றுள்ளார்.
  • மன்னார்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அன்னவாசல் சேவியதெருவை சேர்ந்தவர் செல்வமுத்து.

இவரது மகள் ஹரிணி (வயது 21).

இவர் இளநிலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை இவர் வீட்டின் 2-வது மாடியில் பூ பறிக்க சென்றுள்ளார்.

அப்போது ஹரிணி எதிர்பாரதவிதமாக கால் தடுமாறி மாடியில் இருந்து கீழே விழந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹரிணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News