உள்ளூர் செய்திகள் (District)

ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் ரத்ததான முகாம்

Published On 2023-01-27 06:26 GMT   |   Update On 2023-01-27 06:26 GMT
  • ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது
  • இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பப்ளிக் பவுண்டேஷன் தமிழக கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார். தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத் தலைவர் சகிலன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட நிர்வாகிகள் இரத்ததான முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மருத்துவர் கலைச்செல்வன் தலைமையிலான அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் செந்தில்ராணி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் ரத்தங்களை சேகரித்து அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.


Tags:    

Similar News