உள்ளூர் செய்திகள் (District)

அரியலூரில் வேலை வாய்ப்பு முகாம்-எம்.எல்.ஏ. சின்னப்பா ஆணையை வழங்கினார்

Published On 2023-01-07 07:31 GMT   |   Update On 2023-01-07 07:31 GMT
  • அரியலூரில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது
  • இம்முகாமில் 22 நிறுவனங்கள் கலந்து கொண்டு, தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புகளை வழங்கினர்.

அரியலூர்:

அரியலூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில், மகளிர் திட்டம், ஊரக வாழ்வாதர இயக்கம் சார்பில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சிக்கான ஆணையை அரியலூர் எம்.எல்.ஏ. வக்கீல் சின்னப்பா வழங்கினார். மேலும் அவர் பேசியதாவது:- ஒருவர் சிறந்த கல்வியைப் பெற்று உயர்ந்த பதவிகளை பெறும் போது பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவரது வாழ்க்கைதரம் உயர்வடைகின்றது. எந்த வேலையாக இருந்தாலும் உழைப்பு, நேர்மை இருக்க வேண்டும். பெண்கள் திருமணத்துக்கு பிறகு சுயமாக சம்பாதிக்க வேண்டும். ஆகவே தான் இது போன்று பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை தமிழக முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

எனவே இந்த அரிய வாய்ப்பினை ஒவ்வொரு இளைஞர்களும் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார்். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் முருகண்ணன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் செந்தமிழ்செல்வி, துணைத் தலைவர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் நன்றி தெரிவித்தார். இம்முகாமில் சென்னை, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 22 நிறுவனங்கள் கலந்து கொண்டு, தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புகளை வழங்கினர்.


Tags:    

Similar News