உள்ளூர் செய்திகள் (District)

மதுக்கரை அருகே கேரள கழிவுகளை கொட்ட வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

Published On 2023-06-24 08:59 GMT   |   Update On 2023-06-24 08:59 GMT
  • லாரியில் கழிவுகளை கொட்ட வந்தவர் நாமக்கல் மாவட்டம் ரெட்டிபட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என தெரியவந்தது.
  • லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவை மதுக்கரை அருகே கருஞ்சானி கவுண்டன்பாளையம் உள்ளது. இங்குள்ள காலி இடத்தில் கேரள மாநிலத்தில் இருந்து லாரியில் பிளாஸ்டிக் கண்ணாடி கழிவுகளை சிலர் கொட்ட முயன்றனர். இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் லாரியை சிறை பிடித்தனர்.

பின்னர் லாரியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் டிரைவர் நாமக்கல் மாவட்டம் ரெட்டிபட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது55).

லோடுமேன்கள் உக்கடத்தை சேர்ந்த ஹக்கீம் (33), கபீர் (49), உபைது (39) சுந்தராபுரத்தை சேர்ந்த இஸ்மாயில் (34) என்பது தெரியவந்தது.

இது குறித்து பொதுமக்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News