உள்ளூர் செய்திகள் (District)
மதுக்கரை அருகே குடிபோதையில் கீழே விழுந்த தொழிலாளி சாவு
- கருப்பசாமி சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.
- இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
கோவை:
கோவை மதுக்கரை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 45). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மது குடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே கருப்பசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.