உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் விஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை

Published On 2023-05-14 09:19 GMT   |   Update On 2023-05-14 09:19 GMT
  • கொரோனா பரவல் காரணமாக, பழனிவேலால் வெளிநாடு செல்ல முடியவில்லை.
  • வாழ்க்கையில் விரக்தி அடைந்த பழனிவேல் விஷத்தை எடுத்து குடித்தார்.

கோவை,

கோவை சுந்தராபுரம் அருகே குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது57). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் பழனிவேல் (26).

இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பழனிவேலை அவரது தந்தை வெளிநாட்டிற்கு வேலைக்காக செல்ல கடன் வாங்கி ஏற்பாடு செய்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக, பழனிவேலால் வெளிநாடு செல்ல முடியவில்லை. இதனால் அவரது தந்தைக்கு பணம் இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பழனிசாமி மீண்டும் தனது மகனை வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்ல ஏற்பாடு செய்தார். இதனால் பழனிவேல் தனது தந்தையின் கஷ்டத்தை எண்ணி கவலைப்பட்டார். இந்த நிலையில், பழனிசாமி அவரது மனைவி மற்றும் அவர்களது 2 மகன்களுடன் வெளியே சென்றார். இந்நிலையில் பழனிவேல் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பழனிவேல் விஷத்தை எடுத்து குடித்தார்.

இதையடுத்து பழனிவேல் தாயார் வீடு திரும்பியபோது அவரது மகன் பழனிவேல் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயக்கம் அடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவரது கணவர் பழனிசாமிக்கு தகவல் தெரிவித்தார்.

இதை அறிந்த பழனிசாமி அங்கு விரைந்து சென்று அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் பழனிவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News