கோவையில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை
- சீனிவாசன் கனடாவில் வேலை பார்த்து வந்தார்.
- கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு ேவலையை ராஜினாமா செய்து விட்டு சென்னைக்கு திரும்பினார்.
கோவை,
சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் சீனிவாசன் (வயது 36). என்ஜினீயர். இவர் கனடாவில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு ேவலையை ராஜினாமா செய்து விட்டு சென்னைக்கு திரும்பினார்.கடந்த சில மாதங்களாக இவர் மிகுந்த மன அழுத்தம் காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
சீனிவாசன் கடந்த 22-ந் தேதி கோவைக்கு வந்தார். பின்னர் லட்சுமி மில் சிக்னலில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். மன அழுத்தத்துடன் அறையில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் வாந்தி வந்தது. இதனையடுத்து கழிவறைக்கு சென்ற சீனிவாசன் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது சீனிவாசன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.
அதில் எனக்கு கடுமையான மன உளைச்சல் உள்ளது. நான் தனிமையில் தவிக்கிறேன். என்னால் இந்த உலகத்தில் வாழ முடியாது. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இவ்வாறு அதில் எழுதி இருந்தார்.
பின்னர் போலீசார் சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.