உள்ளூர் செய்திகள் (District)

டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு

Published On 2023-04-14 07:56 GMT   |   Update On 2023-04-14 07:56 GMT
  • பீர் கிடைக்காத விரக்தியில் மது குடித்து செல்கின்றனர்.
  • குடிமகன்கள் விரும்பும் மதுவகைகள் கிடைப்பதில்லை.

சென்னிமலை:

சென்னிமலை வட்டா ரத்தில் ஈங்கூர், வெள்ளோடு, பெருந்துறை ஆர்.எஸ். உள்பட 14 இடங்களில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகிறது.

தற்போது கோடை வெயில் 104 டிகிரிக்கு மேல் இருப்பதால் டாஸ்மாக் கடைகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பீர் விற்பனை அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக பாட்டில் பீர் கேட்டால் டின் பீர், டின் பீர் கேட்டால் பாட்டில் பீர் என கிடைத்து வந்தது. கடந்த 3 நாட்களாக எந்த பீர் வகைகளும் கிடைக்கவில்லை.

குடிமக ன்களும் பல கடைகளில் தேடி அழைந்து பீர் கிடைக்காத விரக்தியில் மது குடித்து செல்கின்றனர். மேலும் டாஸ்மாக் கடைகளில் உயர் ரக மதுபா னங்கள் வரவு அதிகரி த்துள்ளதாலும் குடிமகன்கள் விரும்பும் மதுவகைகள் கிடைப்பதில்லை.

குடிமகன்கள் விரும்பி கேட்கும் பிராண்டுகள் படிப்படியாக குறைந்து விட்டன. விலை அதிகரிப்பு, உள்ள மதுபானங்கள் தான் கிடைக்கின்றன என்ற குற்றசாட்டுகள் நீண்ட நாட்களாக உள்ள நிலையில், தற்போது பீர் பிரியர்களும் மன வேதனை அடைந்துள்ளனர்.

தட்டுபாடு மற்றும் பீர் கிடைக்காமல் அவதியுறுகின்றனர். அதிலும் கேட்ட பீர் வகைகள் கிடைப்பதே இல்லை என குறைபட்டு கொள்கின்றனர். 

Tags:    

Similar News