உள்ளூர் செய்திகள்

தீ விபத்து நடந்த இடத்தை கலெக்டர் ஸ்ரோயா சிங் பார்வையிட்ட காட்சி.

தோட்டக்கலை துறை அலுவலகத்தில் தீ விபத்து

Published On 2023-02-04 09:12 GMT   |   Update On 2023-02-04 09:12 GMT
  • நாமக்கல் கலெக்டர் அலுவலகம் பின்புறம் மாவட்ட தோட்டக்கலை தொழில் நுட்ப ஆதார மைய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இருந்து இன்று காலை கரும்புகை வெளியேறியது .இதனை பார்த்த காவலாளி நல்லி பாளையம் போலீசாருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.
  • தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அருகில் செல்ல முடியவில்லை. இதனால் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

நாமக்கல்:

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் பின்புறம் மாவட்ட தோட்டக்கலை தொழில் நுட்ப ஆதார மைய அலுவலகம் உள்ளது.

தீ விபத்து

இந்த அலுவலகத்தில் இருந்து இன்று காலை கரும்புகை வெளியேறியது .இதனை பார்த்த காவலாளி நல்லி பாளையம் போலீசாருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயைணப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அருகில் செல்ல முடியவில்லை. இதனால் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் அங்கிருந்த மேஜை மற்றும் நாற்காலிகள் எரிந்து நாசமானது.

கலெக்டர் விசாரணை

இதற்கிடையே அங்கு வந்த கலெக்டர் ஸ்ரேயா சிங் தீ விபத்துக்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். மேலும் தீ விபத்து நடந்த இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தள்ளது . மேலும் வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் இன்று காலை கலெக்டர் அலுவலக பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News