உள்ளூர் செய்திகள்
சிதம்பரத்தில் பிரபல ரவுடியிடம் கஞ்சா பறிமுதல்
- .சிதம்பரம் நகர போலீசார் நேற்று சிதம்பரத்தில் உள்ள முக்கிய வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- பிரபல ரவுடி சிவா என்ற சிவராஜிடம் இருந்த சுமார் 1.550 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
கடலூர்:
சிதம்பரம் நகர போலீசார் நேற்று சிதம்பரத்தில் உள்ள முக்கிய வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிதம்பரம் எம்.எம் தெரு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது சிதம்பரத்தை அடுத்த ஆடூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சிவா என்கிற சிவராஜ் (வயது 26) என்பதும், அவரிடம் இருந்த சுமார் 1.550 கிலோ கஞ்சாவை சிதம்பரம் நகர போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.