உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் மனைவிக்கு தெரியாமல் சிறுமியை 2-வது திருமணம் செய்த வாலிபர்

Published On 2023-05-28 09:21 GMT   |   Update On 2023-05-28 09:21 GMT
  • திருமணத்தை மறைத்து அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது இளம்பெண்ணுடன் மகேந்திர பூபதி பழகினார்.
  • மகேந்திர பூபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை,

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மகேந்திர பூபதி (வயது 22). கூலி தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.

ஆனால் திருமணத்தை மறைத்து அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது இளம்பெண்ணுடன் அவர் பழகினார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தனர்.

மகேந்திரபூபதி, சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் சிறுமியை மேட்டுப்பாளையத்தில் உள்ள கோவிலில் வைத்து திருமணமும் செய்து கொண்டார்.

இந்த நிலையில் மகேந்திரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆன விவரம் சிறுமிக்கு தெரியவந்தது. இதேபோல மகேந்திர பூபதியின் மனைவிக்கும், தனது கணவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து அவரது மனைவி, மகேந்திர பூபதியிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மகேந்திர பூபதி வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த குற்றத்துக்காக மகேந்திர பூபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News