உள்ளூர் செய்திகள் (District)

மின்னல் தாக்கி படுகாயம் அடைந்த வாலிபர் செந்தில் குமாருக்கு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பண்ருட்டியில் மின்னல் தாக்கி வியாபாரி படுகாயம்

Published On 2023-10-16 07:10 GMT   |   Update On 2023-10-16 07:10 GMT
மரத்தடியில் நின்று அவரது நண்பர்களுடன் செல் போன் மூலம் வீடி யோ காலில் பேசினார்

கடலூர்:

பண்ருட்டி தனபால் செட்டி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர், பண்ருட்டி காந்தி ரோட்டில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவர் பண்ருட்டியை அடுத்த பணிகன்குப்பம் பகுதியில் வரும்போது மழை பெய்தது. இதனால் மரத்தடியில் நின்று அவரது நண்பர்களுடன் செல் போன் மூலம் வீடி யோ காலில் பேசினார். அப்போது பயங்கர சத்தத்து டன் இடி இடித்து மின்னல் மின்னியது.இதில் செந்தில்குமார் மீது மின்னல் தாக்கியது. இதனால் அவர் படுகாயம் அடைந்தார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகசேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட் டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இந்ததிடீர் மழையால் பண்ருட்டி 4 முனை சந்திப்பு, காந்தி ரோடு, ராஜாஜி சாலை, கடலூர் ரோடு ஆகிய இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள்ஊர்ந்து சென்றனர். இந்ததிடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News