கோவையில் பெயிண்டர் வீட்டில் நகை -பணம் கொள்ளை
- சம்பவத்தன்று வீட்டில் உள்ள அனைவரும் காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினர்.
- அய்யப்பராசு கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
கோவை,
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் அய்யப்பராசு (வயது 33). பெயிண்டர். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் உள்ள அனைவரும் காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினர். நள்ளிரவு வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்க பணம், மோதிரம், வளையல், செயின், கம்மல் உள்பட 10 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
அதிகாலையில் எழுந்து பார்த்த போது பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அய்யப்பராசு அதிர்ச்சியடைந்தார். பின்னர்
உ
இது குறித்து அவர் கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். டனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கிய பெயிண்டர் வீட்டில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூரை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி மீரா (29). கூலித் தொழிலாளி. இவர் சூலூர் அருகே உள்ள காடம்பாடியில் உள்ள தனியார் மில்லில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரது அறைக்குள் நுழைந்த மர்மநபர் மீராவின் 1½ பவுன் கைசெயின், ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் அவருடன் தங்கி இருந்தவர்களின் 6 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.