உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்

Published On 2023-05-06 08:35 GMT   |   Update On 2023-05-06 08:35 GMT
  • 16 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன
  • 35 பேருக்கு ரூ.4.37 லட்சம் மொபைல் போன் வழங்கப்பட்டது

கரூர்,

கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் முகாமை தொடங்கி வைத்தார். அதில் 16 தொழில் துறை நிறுவனங்கள் பங்கேற்றன. பிறகு, நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. கலெக்டர் பிரபு சங்கர் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் மொபைல் போன்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., கண்ணன், திட்ட இயக்குனர் சீனிவாசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஷீலா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News