உள்ளூர் செய்திகள்
ெரயிலில் அடிபட்டு கிடந்த முதியவர் மீட்பு
- ெரயிலில் அடிபட்டு கிடந்த முதியவர் மீட்கப்பட்டார்
- போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் புகளூர் கரூர் ெரயில்வே தண்டவாள பாதையில் ஹோம் சிக்னல் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ெரயிலில் அடிபட்டு மயங்கிய நிலையில் கிடப்பதாக புகளூர் ெரயில்வே நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ெரயில்வே நிலைய அதிகாரிகள் மயங்கி கிடந்தவரை ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து கரூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் ெரயில்வே போலீசார் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வரும் அடையாளம் தெரியாத நபர் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.