உள்ளூர் செய்திகள் (District)

கஞ்சா விற்ற 3 பேர் கைது

Published On 2022-07-11 08:23 GMT   |   Update On 2022-07-11 08:23 GMT
  • கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அவர்களிடம் 1.250 கிலோகிராம் கஞ்சா, 3 செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

 மதுரை

கோரிப்பாளையம், ஜம்புேராபுரம் மார்க்கெட், பெயிண்ட் கடை அருகே 3 பேர் கஞ்சா விற்பதாக தல்லாகுளம் போலீசுக்கு புகார் வந்தது. போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அங்கு 3 பேர் பிடிபட்டனர்.

அவர்களிடம் 1.250 கிலோகிராம் கஞ்சா, 3 செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேரையும் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அவர்கள் ஜம்புேராபுரம் இளங்கோ மகன் கிஷோர் (20), தெற்கு வாசல் எப்.எப். ரோடு, அண்ணாதுரை மகன் மணிகண்டன் (19), தெற்கு வாசல், செட்டியூரணிசந்து மணிகண்டன் மகன் சந்தோஷ்குமார் (19) என்பது தெரிய வந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News