மேலூரில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்
- மேலூரில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்.
- ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இளைஞ ரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட செய லாளரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா கலந்துகொண்டு பேசியதாவது:-
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மேலூர், மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளில் தொகுதிக்கு 1 லட்சம் பேர் வீதம் 3 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வருகின்ற 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.
தி.மு.க.வை கண்டித்து வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) மேலூரில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி நிர்வாகிகள் ஏராள மானோர் கலந்து கொள்ள வேண்டும்.
தமிழக முதல்வர் ஏற்கனவே முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றார். அங்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரிவித்தனர்.ஆனால் அது தொடர்பாக புதிய நிறுவனங்களோ, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளோ பெற்றதாக தெரியவில்லை.
தற்போது மீண்டும் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர், ஜப்பான் செல்லும் முதல்வர் ஜப்பானில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்திற்கு நிதி உதவி அளிக்கவுள்ள ஜிகா நிறுவனத்தின் அதிகாரி களை சந்தித்து விரைந்து நிதிகளை அனுப்ப கோரிக்கை விடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.