வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர்
- வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
- முகவரி கேட்பது போல வீடுகளுக்கு சென்று எத்தனை பேர் உள்ளார்கள்? என்று வேவு பார்த்து விட்டு, திருட்டில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
மதுரை
மதுரை மேல வடம்போக்கி தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 64). இவர் நேற்று மாலை வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அவரது மனைவி சமையல் அறையில் இருந்தார். அப்போது ஒரு மர்மநபர், அவருடைய வீட்டுக்குள் புகுந்து செல்போனை திருடிக்கொண்டு ஓடினார்.
இதனைப்பார்த்த ஜெயபிரகாஷ், திருடன்... திருடன்... என்று கூச்ச லிட்டார். இதையடுத்து அந்த நபர் வீட்டிலிருந்து வெளியே தப்பி ஓடினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் திரண்டு அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அதன் பிறகு அவர் திடீர் நகர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இன்ஸ்பெக்டர் லோகே சுவரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் அந்த வாலிபர் சிவகங்கை மாவட்டம் வேல்முடிக்கரையை சேர்ந்த பார்த்திபன் (34) என்பது தெரிய வந்தது.
அவரிடம் ஜெய பிரகாசின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பார்்த்திபனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது அவர் மீது பல வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
பார்த்திபன் முகவரி கேட்பது போல வீடுகளுக்கு சென்று எத்தனை பேர் உள்ளார்கள்? என்று வேவு பார்த்து விட்டு, திருட்டில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.நேற்று மாலை மதுரை மேல வடம்போக்கி தெருவுக்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் முதியவர் ஜெயப்பிரகாஷ் டிவி பார்த்துக் கொண்டி ருந்ததை பார்த்த பார்த்திபன், நைசாக வீட்டுக்குள் புகுந்து செல்போனை திருடிக் கொண்டு தப்ப முயன்றார். அப்போது பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து விட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.