உள்ளூர் செய்திகள் (District)

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்

Published On 2023-05-15 06:43 GMT   |   Update On 2023-05-15 06:43 GMT
  • சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் தைக்கூடம் விட்டிலாவை சேர்ந்தவர் கார்த்திக்(19).

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா மண்ணாடிமங்கலம் பகுதியில் வசித்து வந்த இவர், அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொ டுமை செய்தார்.

சமயநல்லூர் மகளிர் ேபாலீசார் கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்த கார்த்திக் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கலெக்டருக்கு சிபாரிசு செய்தார்.

அதன்பேரில் கலெக்டர் அனீஷ்சேகர் கார்த்திக்கை குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்க உத்தர விட்டார்.

இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News