உள்ளூர் செய்திகள் (District)

நீதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-27 07:59 GMT   |   Update On 2023-06-27 07:59 GMT
  • நீதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே உள்ள நெட்டுக்குளம் கிராமத்தில் நீதி விநாயகர் கோவிலில் கும்பாபிஷே விழா நடந்தது. இதனை முன்னிட்டு திருவேடகம் கோபால கிருஷ்ணன் ஜோசியர் தலை மையில் 2 நாட்கள் யாக பூஜை நடந்தது. தொடர்ந்து மேள தாளத்்துடன் சிவாச்சாரி யார்கள் புனித நீர் குடங்க ளுடன் கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் கோபுர கலசத்தில் பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் நடந்தது.

பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News